கோபி அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வேலுமணியின் மகள் ஹேமாமாலினி (13) அரசு பள்ளியில் 8 வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் மற்றும் கல்வி சேனல்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹேமா மாலினி வீட்டில் இருந்து கல்வி தொலைக்காட்சி வழியாக பாடம் படித்து வந்துள்ளார்.
ஆனால் வீட்டில் உள்ள கேபிள் டீவியில் ஒளிபரப்பு குறைபாடு காரணமாக கல்வி சேனல் சரிவர ஒளிபரப்பாகவில்லை.
இதனால் மாணவி பாடம் படிக்க தனது பெற்றொரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து மாணவியின் உறவினர் ஒருவர் பழைய செல்போன் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் அந்த போன் சரியாக இயங்காத காரணத்தால் அதிலும் பாடம் படிக்க முடியாத நிலையில் மன வேதனையடைந்த சிறுமி
ஹேமாமாலினி, இன்று அதிகாலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, உடல் முழுவதும் மண்ணெண்ணை உற்றி தீ வைத்துக்கொண்டார்.
வீட்டில் புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் சிறுமி ஹேமாமாலினி உடல் முழுதும் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பங்களாபுதூர் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...