நோய் தொற்று பாதிப்பில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்பவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ளது. எனவே, அவர்களின் விவரங்களை சேகரித்து எந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த் தொற்று அதிகளவில் உள்ளது என்பதை கண்டறிந்து தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை. அடுத்த 20 நாள்கள் மிக முக்கியமான காலகட்டம். பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம், கூட்டமாக கடை வீதிகளுக்கு செல்கின்றனர். நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பாதுகாப்புடன் மக்கள் இருக்க வேண்டும்.
ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தால் மட்டுமே குணப்படுத்துவது எளிது. மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா எதிர்ப்பு உயிரி கண்டறியும் பரிசோதனையில் சென்னை உள்பட ஒரு சில இடங்களில் மட்டுமே 30 சதவீதம் பேருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.