ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து
குழந்தைகளுக்கான சர்வதேச தன்னார்வ அமைப்பான யுனிசெஃப் தரப்பில் வெளியிட்ட
அறிக்கையில் , " கரோனா தொற்று நோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின்
கல்வி பாதிக்கப்பட்டுள்ளது . எனவே , ஆசிரியர்களுக்கு முதலில் கரோனா
தடுப்பு மருந்தைச் செலுத்துவதன் மூலம் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச்
சரி செய்யலாம் . சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா
தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் " என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது .