வீடு கட்ட கடன் பெறும் நடைமுறை – அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
தமிழக அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள் சொந்தமாக வீடு கட்ட, வாங்க வாங்க அரசு சார்பில் முன்பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
வீட்டுக்கடன் வாங்கும் திட்டம்:
அரசு பணியில் உள்ள ஊழியர்கள் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டவும் அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கவும் தமிழக அரசு சார்பில் முன்பணம் வழங்கப்படுகிறது. இதற்கு 160 கோடி ரூபாய் நிதி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முன்பணமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும்.
வெளி மாநிலத்தில் வேலை பார்க்கும் ஒரு அரசு ஊழியர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு வாங்குவது குறித்து புகார்கள் எழுந்தது. எனவே அதனை சரி செய்ய வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் டி.கார்த்திகேயன் இந்த திட்டம் குறித்த மாற்றங்கள் பற்றி அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெளியிட்ட அறிவிப்பில், “வீட்டுக்கடன் முன்பணம் வழங்கும் திட்டத்தில் சில சிக்கல் இருந்து வந்த காரணத்தால் தற்போது அந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சொந்த வீடு வாங்கும் அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்கும் மாவட்டத்தின் ஆட்சியரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...