CLICK HERE
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தேர்வை எதிர்கொண்டு தற்போது வகுப்புகள் தொடங்கியுள்ளன.இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் பகுதிகளில் உள்ள கோவிட் -19 நிலைமையை ஆய்வு செய்த பின்னர் தங்கள் அதிகார வரம்பில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. பல மாநில அரசுகள் 2021 ஜனவரியில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்திருந்தாலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.அந்த வகையில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. திருச்சி மேலப்புதூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் (செயிண்ட் ஜோசப்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி) பள்ளிக்கு வருகை தரும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு சந்தனம், குங்குமம், ரோஜாவுடன் பன்னீர் தெளித்து பள்ளி தலைமையாசிரியர் லூர்து மேரி தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் இன்முகத்துடன் மாணவிகளை பள்ளிக்கு வரவேற்றனர்.கிட்டத்திட்ட 9 மாதங்களுக்கு பிறகு வரும் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் வருகை புரியும் வேளையில் சந்தனம், குங்குமம், பன்னீர் தெளித்து வரவேற்றது மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...