கலப்படமில்லாத நல்ல தேனை தேர்ந்தெடுப்பது எப்படி? என கேட்கலாம்.
தேனின்
தரத்தை கண்டறிவதற்கு மிக எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க முடிகிற
சோதனை முறை இதுவாகும். ஒரு பேப்பரில் இரண்டு துளி தேனை விட்டு பார்ப்பது.
அதாவது, தண்ணீரை உறிஞ்சக்கூடிய எந்தக் காகிதத்திலும் தேனை விட்டு
பார்க்கலாம்.
அப்படி செய்யும்போது தேன் அப்படியே
இருந்தால் நல்ல தேன், காகிதத்தால் உறிஞ்சப்பட்டால் கலப்பட தேன். அதேபோல
நீர் நிறைந்த கண்ணாடி டம்ளர் ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேனை மேலிருந்து
ஊற்றினால், அது ஒரு கம்பியைப் போல கீழே இறங்கி அடிப்பகுதியைத் தொட
வேண்டும். மாறாக, இடையிலேயே கரைய ஆரம்பித்தால், அது கலப்பட தேன். தேனில்
மூன்று வகை உள்ளன. முதலாவது கொம்பு தேன். பாறைகள், மரங்களில், அதாவது
வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூடு கட்டக்கூடியது இந்த தேனீ வகை. அதிலிருந்து
குடம்குடமாக தேன் கிடைக்கும்.
2-வது பொந்து தேன். இது குகை, மர துவாரம் போன்ற இருட்டான
இடங்களில் கூடு கட்டும் தேனீ வகை இது. இதைத்தான் பெட்டிகளில்
வளர்க்கிறார்கள். இந்த வகை தேன் மிதமான அளவு கிடைக்கும். 3-வது வகை கொசுத்
தேனீ என்ற சிறிய தேனீ மூலம் கிடைக்கும் தேன் ஆகும். இந்தத் தேன் கிடைப்பது
கஷ்டம். ஆனால், இதில்தான் மருத்துவ மதிப்பு அதிகம்.
தேனை
எப்படி எடுத்தாலும், அதில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற வேண்டும். அப்போதுதான்
நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். இதற்கு வெயிலில் வைத்து எடுக்க
வேண்டும். ஆனால், அப்படி இயற்கையாக பதப்படுத்துவதற்கான காலம் அதிகமாகும்
என்பதால், தேனை சூடுபடுத்தி விடுகிறார்கள். இப்படி செய்யும்போது தேனின்
இயல்புதன்மை மாறிவிடுகிறது.
அது மட்டுமல்லாமல்
தேனை பெருமளவில் உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள் அதனை பதப்படுத்தி
விடுகிறார்கள். எனவே வணிகரீதியாக தேனை வாங்கும்போது, இந்த அம்சங்களை
கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...