ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்வானது வரும் ஜூலை 3ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தில் சேர ஜேஇஇ எனும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, நடப்பு ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு 4 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மெயின் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் தற்போது 2021-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஜேஇஇ மெயின் தேர்வானது வரும் பிப்ரவரி 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது என ரமேஷ் பொக்ரியால் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...