கொரோனா பிரச்னையால், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காததால், மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, &'ஆல் பாஸ்&' செய்யப்படுவதாக, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டது.இந்நிலையில், &'ஆல் பாஸ்&' அறிவிப்பை, தனி தேர்வர்களுக்கும், மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கும் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, கோவை வித்யாவிகாசினி பள்ளி தலைமையாசிரியர் ஜோதி கூறியதாவது: கடந்தாண்டு தொற்று காலத்திலும், மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்கள், தேர்வெழுத வலியுறுத்தப்பட்டது. இந்த ஆண்டும் அரசு, &'ஆல் பாஸ்&' என அறிவித்தாலும், சிறப்பு குழந்தைகளுக்கு அமல்படுத்துவது குறித்து குறிப்பிடப்படவில்லை.ஆண்டு முழுதும் படித்தாலும், இத்தகைய மாணவர்கள், அடுத்த பொதுத்தேர்வு வரை, பாடங்களை நினைவில் வைத்து எழுதுவது, சிரமமாக இருக்கும். எனவே, அவர்களுக்கும் தேர்வு இன்றி, தேர்ச்சி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.அதேபோல, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்களுக்கும், &'ஆல் பாஸ்&' வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...