பஞ்சாப் நேஷனல் வங்கியின் சிறப்பு சம்பளக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் 3 லட்சம் ரூபாய் வரையில் பெறலாம் என்ற அசத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
பிஎன்பி மை சேலரி அக்கவுண்ட் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சில்வர், கோல்டு, பிரீமியம் மற்றும் பிளாட்டினம். இந்த நான்கு பிரிவுகளிலும் சம்பளம் மற்றும் வாடிக்கையாளரைப் பொறுத்து ஓவர் டிராஃப்ட் வசதி வசதி கிடைக்கும் .
பிரைமரி அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள் தங்களது கடைசி இரண்டு மாத சம்பளத் தொகையை ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் எடுக்கலாம் . அந்தப் பணத்தை அடுத்த ஆறு மாதங்களுக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் . அதன் பிறகு மீண்டும் அவர்கள் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறலாம் .
சில்வர் சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ .50,000 வரையிலும் , கோல்டு சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ .1,50,000 வரையிலும் , பிரீமியம் சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ .2,25,000 வரையிலும் , பிளாட்டினம் சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.3 லட்சம் வரையிலும் ஓவர் டிராப்ட் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,000 முதல் 25,000 வரை சம்பளம் பெறுபவர்கள் சில்வர் பிரிவிலும், 25,000 முதல் 75,000 வரை பெறுபவர்கள் கோல்டு பிரிவிலும், 75,000 முதல் 1.5 லட்சம் வரை பெறுபவர்கள் பிரீமியம் பிரிவிலும், 1.50 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறுவோர் பிளாட்டினம் பிரிவிலும் வருவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.