வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை ஆண்டுதோறும் வெளியிடப்படும். இதில் நடப்பாண்டு 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 38 தேர்வுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகவில்லை.2021ம் ஆண்டு தேர்வுகால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என்றும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணையத்தில் சென்று பார்க்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...