கொரோனா பாதிப்பு காலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டுக்கான (2022) வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்கும்படி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வாழ்நாள் சான்றிதழை எப்படி எளிதாக சமர்ப்பிக்கலாம் என்பது பற்றியும் தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து பென்சன் கிடைக்கும்.கொரோனா பாதிப்பு காலத்தில் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு வாழ்நாள் சான்றிதழ் பெறுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை ஜூலை முதல் செப்டம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கும்படி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். வாழ்நாள் சான்றிதழை எப்படி சமர்ப்பிப்பது? ஜீவன் பிரமான் இணையதளம் (https://jeevanpramaan.gov.in/) மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்திய அஞ்சல் துறை வங்கியின் (India Post Payments Bank) சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70/- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி (Biometric Device) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லாமல் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி (jeevan pramaan face app) பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்.மின்னணு வாழ்நாள் சான்று (Digital life certificate) பெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்.
- ஆதார் எண்
- P.P.O. No.
- வங்கி கணக்கு எண்
- ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்
கருவூலத்திற்கு அனுப்பலாம்.
- ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது)
- அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது)
- வட்டாட்சியர்/துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்