ஒரு அரசு ஊழியரின் வேதனைக் கவிதை இது
மேனியை
வருத்தி
அலுவல்
பார்த்ததற்கு...
மானிய
கோரிக்கையில்
அலவன்ஸ்
கிடைக்குமென
ஆவலுடன்
எதிர்பார்த்தோம்
சட்டசபையில்
அறிவித்த
பத்து
ரூபாயை....
சட்டையில்
பைகள்
இரண்டிருந்தும்
வைப்பதற்கு
இடமில்லை
அறிவித்த
பத்து
ரூபாயில்
தேனீர்
வாங்கவா...?
இல்லை
தேயிலைத்
தோட்டம்
வாங்கவா
என
திகைத்துப்போயும்....
குழம்பி
வாங்கவா
என
குழம்பிப்போயும்
இருக்கிறோம்....
முத்துவேலரின்
முத்துப்பேரன்
வெத்து
வாக்குறுதி
தரமாட்டீர்
என
விழித்திருந்தோம்
விடியல்
வருமென்று
காத்திருந்தோம்
ஓய்வு வயதை
உயர்த்தியதே
வாழ்வியல் பெருமை என
ஓய்வுக்கே ஓய்வு
தந்த பெருமையே
உமக்கு போதும்..
வாழ்நாளெல்லாம்
ஓய்வூதியம்
தரமாட்டேன்
என்கிறீர்கள்...
பீட்டியார்
பேரனிடம்
ஈட்டியார்
எதிபார்த்தோம்
அவர்
பாட்டிமார்
போல பல
கதைகள்
சொல்கிறார்...
ஒவ்வொரு
அரசுஊழியரையும்
கைபேசியில்
தொடர்புகொண்டு
ஒய்வூதியம்
தருவேன்
என்றதும்
கரகோஷம்
எழுப்பினோம்
நம்பிக்கயை
நிறைவேற்றுவீர்
என
நம்பி
கை வைத்தோம்
உங்கள்
சின்னத்தில்
நன்றாக
அறைந்தீர்கள்
எங்கள்
கன்னத்தில்
உங்களது வெற்று
கோஷத்தை
நம்பி
மோசம் போய்
விட்டோம்
நம்பிக்கை
வைத்து
நாசமாய்
போய்விட்டோம்...
பத்தோடு
பதினொன்றாகவும்
பொத்தாம்
பொதுவாகவும்
இல்லாமல்
ஒட்டுமொத்தமும்
வாக்களித்தோம்
பொத்தானைக்கூட
மாற்றமுடியாமல்
தத்தளிக்கிறோம்...
எங்களுக்கு
பஞ்சப்படியை
உயர்த்திக்கேட்டால்
பஞ்சப்பாட்டு
பாடுகிறீர்கள்...
உங்களோடு
உள்ள
உறுப்பினர்களுக்கு
கஞ்சத்தனம்
காட்டாமல்
கரிசனம்
காட்டுகிறீர்கள்...
இடர்படியை
உயர்த்திக்
கேட்டால்
தொடர்
செலவீனத்தை
தொகுத்து
வழங்குகிறீர்கள்...
முதல்வரே....
அன்று
முதல்
இன்றுவரை
நாங்கள்தான்
ஆள்வோரின்
ஆணிவேரே...
கோடை
காலத்திலும்
நாங்கள்
கொழுந்துவிட்டு
வளர....
எங்களுக்கும்
நீர்
பாய்ச்சுங்கள்...
ஆசிரியர்கள்
அரசு ஊழியர்கள்
படித்ததில் பிடித்தது