நம் முன்னோர்கள் பலவிதமான பழமொழிகளை உருவாக்கி வைத்துச் சென்றுள்ளனர். பல நேரங்களில் அவை மூட நம்பிக்கைகளாக தெரிகிறது.
ஆனால் உண்மையில் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பின் அறிவியல் இருப்பதை நாம் உணரமுடியும். உதாரணமாக இரவு நேரத்தில் நகம் வெட்ட கூடாது. என்று கூறுவார்கள் வெளிச்சம் இல்லாத காலத்தில் இரவு நேரத்தில் நகம் வெட்டினால் அதை வீட்டிற்குள் சிதறி பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் கூறப்பட்ட பழமொழி அது.
அதுபோல முருங்கை மரத்தை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது என்று கூறுவார்கள். அதற்கு காரணம் என்னவென்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முருங்கை மரத்தில் கிளைகள் மெல்லியதாக இருக்கும். எனவே குழந்தைகள் அதில் ஏறி விளையாடினார்கள் என்றால் கீழே விழுந்து விடுவார்கள் என்பதை தவிர்க்கவும், முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி இருப்பதால் வீட்டிற்கு முன் வைத்தால் வீட்டிற்குள் பூச்சி வந்துவிடும் என்பதை தவிர்ப்பதற்காகவும் வீட்டிற்கு முன் முருங்கை மரத்தை வைக்கக்கூடாது என்பார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...