இங்கிலாந்து நாட்டில் பணிபுரிய ஆண் மற்றும் பெண் செவிலியர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே தகுதியுள்ளவர்களின் விவரத்தை வெளிநாட்டு வேலை வழங்குவோருக்குத் தெரிவிக்கும் பொருட்டு, OET (Oocupational English Test) பயிற்சியில் Grade B மற்றும் அதற்குமேல் தேர்ச்சிப்பெற்றவர்களும், IELTS (Interniational English Language Testing. Systern) பயிற்சியில் Band 7.0 மற்றும் அதற்கு மேல் தேர்ச்சிப்பெற்றவர்களும் omcmanpower.com/registration.php என்ற இணைய பக்கத்தில் பதிவுசெய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெளிநாட்டில் பணிப்புரியும் பொருட்டு, OET இலவசப் பயிற்சி பயில விரும்பும் செவிலிய மாணவர்கள்/மாணவிகள் மற்றும் வேலை அனுபவமுள்ள செவிலியர்களுக்கு அரசின் மூலமாக முன்வரிசையின் அடிப்படையில் இலவசப் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ள வலைதள இணைப்பில் தவறாமல் பதிவுசெய்து பயனடையும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், இந்நிறுவனத்தில் பதிவு செய்வது நான்கு வருடங்களுக்கு செல்லத்தக்கதாகும். எனவே இந்நிறுவனத்தில் செல்லத்தக்க பதிவில் உள்ள பதிவுதாரர்கள் மட்டும் தற்போது IELTS அல்லது OET-ல் தேச்சிப்பெற்றிருப்பின் தங்களுடைய பதிவு எண், பதிவிட்ட தேதி, சுய விண்ணப்பப்படிவம் மற்றும் ELTS/OET தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களையும் omcluk2020@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்பதால் நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே, விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.