எழுந்தவுடன் உடல் வலி: பலருக்கு தூங்கி எழுந்ததும் உடலில் விறைப்பு மற்றும் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சில சமயங்களில் அலுவலகத்தில் பணிபுரியும் போதும் இந்தப் பிரச்னை ஏற்படும். ஆனால் தூங்கி எழுந்தவுடன் உடலில் வலி ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தூக்கி எழுந்த பிறகு உடலில் வலிக்கான காரணங்கள்
தூக்கி எழுந்தப் பிறகு உடலில் ஏற்படும் வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். உடல் பலவீனம், தூக்கமின்மை அல்லது உடல் செயல்பாடு இல்லாமை போன்றவை அடங்கும். ஆனால் இதற்கு உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு பெரிய முக்கிய காரணமாகும்.
தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன், உடலில் வலி இருந்தால் இந்த வழிமுறைகளை பின்பற்றவும்-
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்-
தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் உடலில் வலி இருப்பதாகவும் புகார்
இருந்தால், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட அத்தகைய உணவுகளை உணவில்
சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது உங்கள் தசைகள், எலும்புகள், செரிமானம்
மற்றும் உடலில் உள்ள இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்கிறது. இதற்கு
பால், தயிர், மோர் மற்றும் சோயாபீன், பருப்பு போன்றவற்றை உணவில்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்-
தினமும் தூங்கி எழுந்தவுடன் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய
முயற்சிக்கவும். குறிப்பாக யோகா, இதனுடன் காலை நடைப்பயிற்சியும் செய்யலாம்.
வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்-
வெந்நீரில் குளிப்பது சோர்வை நீக்குகிறது, இதன் காரணமாக உங்கள் தசைகள்
பதற்றம் மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெறுகின்றன. அதுமட்டுமின்றி,
வெந்நீரில் குளித்தால், புத்துணர்ச்சியும், வலியும் நீங்கும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...