தேவை
அரிசி மாவு – 1 கப்
பொடித்த சர்க்கரை – 1/2 கப்
தேங்காய்ப்பால் – 1 கப்
மைதா – 1/4 கப்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
எண்ணை – தேவையான அளவு
🔰செய்முறை:
🔰மைதா, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும்.
🔰அத்துடன்
பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும்.
🔰மாவு
கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு
இருக்க வேண்டும். எண்ணையை விட்டு எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு
அச்சை எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில்
நனைக்கவும்.
🔰அச்சு சூட்டில் மாவு அச்சில்
ஒட்டிக் கொள்ளும். உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள
எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும்.
🔰சிறிது
நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக
அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக
சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும்.