சேலம் மாவட்டம் முழுவதிலும் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்கள் உட்பட 662 பேருக்கு பாராட்டி மாநில அளவிலேயே முதன் முதலாக முப்பெரும் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைப்பெற்றது.
முப்பெரும் விருது விழா
இல்லம்
தேடி கல்வி திட்டம் தமிழ்நாடு அரசு துவக்கி வைத்தது. இதனிடையே சேலம்
மாவட்டம் எப்பபாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகேயுள்ள மூலப்பாதை ல்
கல்லூரியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேலம் மாவட்டம்
முழுவதிலும் சிறப்பாக பணியாற்றி வரும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 662
பேருக்கு மாநில அளவிலேயே முதன்முதலாக கொங்கணாபுரம் டார்வின் சயின்ஸ் கிளப்
சார்பில் பாராட்டி முப்பெரும் விருது வழங்கும் விழா மாவட்ட உதவி திட்ட
அலுவலர் மாரியப்பன் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
இந்நிகழ்ச்சியில் புது டெல்லி அசோகா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான நாராயணி சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்து அனைவருக்கும் கேடயங்களுடன் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 62 ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பாக பணியாற்றிய 300 பேர், மிகவும் சிறப்பாக பணியாற்றிய 300 பேர் என மொத்தம் 662 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குநர் சுப்பிரமணி, மாவட்ட ஊடகவியலாளர்கள் விஜயகுமார், சக்திவேல், டார்வின் சயின்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் செல்வராசு, மகேஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...