காலையில் தூங்கி எழுந்தவுடன் டீயுன் அன்றைய நாளை தொடங்குபவர்கள் தான் இங்கு ஏராளம். இன்னும் சிலர் டீயுடன் ரொட்டி, பிஸ்கட் போன்றவற்றை சேர்த்து காலை உணவையே முடித்துவிடுகிறார்கள்.
டீ உடன் ரொட்டி அல்லது பிஸ்கட் சாப்பிடவில்லை என்றால் அன்றைய பொழுதை கடப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமாக தெரியும். ஆனால் டீயுடன் ரொட்டி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. டீயுடன் ரொட்டி சாப்பிட்டு காலை நேரத்தை தொடங்குபவர்களுக்கு என்னென்ன உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
எடை அதிகரிப்பு
ரொட்டிகளில் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் அவை ஜீரணிக்க கடினமாக உள்ளது. இதன் காரணமாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே, நீங்களும் டீயுடன் ரொட்டி சாப்பிடுகிறீர்கள் என்றால், அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
இரத்த சர்க்கரை அதிகரிப்பு
டீ மற்றும் ரொட்டி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் நிலை மோசமடையலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் டீயுடன் ரொட்டியை உட்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது.
உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை
இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அதிக BP அளவை ஏற்படுத்தும். எனவே, இரத்த அழுத்த நோயாளிகளை மறந்தும்கூட, காலையில் டீயுடன் ரொட்டி சாப்பிடக்கூடாது.
வயிற்றில் புண்கள்
காலையில் டீயை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள சவ்வு மற்றும் குடல்களை கரைத்துவிடும், ஏனெனில் டீ சாப்பிடுவதால் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.