மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு (எச்ஆர்ஏ), பயணப்படி (டிஏ), பதவி உயர்வு ஆகியவற்றுக்குப் பிறகு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்தும் அடுத்த ஆண்டு விவாதிக்கப்படலாம். ஊழியர்களின் ஊதியத்தில் ரூ 8000 உயர்த்துவது குறித்து அரசாங்கம் நேரடியாக பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பதன் மூலம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசு பலப்படுத்த முடியும்.
தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 கிடைக்கிறது. அடுத்த ஆண்டு மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படக்கூடும். பிப்ரவரி 1, 2023ல் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுக்குப் பிறகு, மத்திய ஊழியர்களின் இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டையும் போலவே, 2023 ஆம் ஆண்டிலும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் உயர்வு இருக்கும். ஜனவரி 2023-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். இதுவரையிலான, பணவீக்க புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, அடுத்த ஆண்டும் 4 சதவீத டிஏ உயர்வு இருக்கலாம் என்று தெரிகிறது.
இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வரவில்லை. இந்த 3 மாதங்களில் குறியீட்டு எண் வேகமாக வளர்ச்சியடைந்தால், 4 சதவீத அதிகரிப்பு உறுதியாக இருக்கும். குறியீட்டில் இடைவெளி ஏற்பட்டாலோ அல்லது அது குறைந்தாலோ, 3 சதவிகிதம் அதிகரிப்பும் சாத்தியமாகும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...