தமிழக ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு உயர்த்திய 4 சதவிகிதம் அகவிலைப்படி எப்போது ? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 20 November 2022

தமிழக ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு உயர்த்திய 4 சதவிகிதம் அகவிலைப்படி எப்போது ?

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு உயர்த்தி வழங்கிய 4 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான், ஒன்றிய அரசு அகவிலைப்படியினை உயர்த்தும்போது, அதன் அடிப்படையிலேயே நிலுவை தொகையோடு மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கும் நடைமுறையை கொண்டு வந்தார். அதைப்போலவே, ஈட்டிய விடுப்பு கணக்கில் உள்ள விடுப்பினை சரண் செய்து ஊதியமாக பெறும் நடைமுறையும் கொண்டு வந்தவர் கலைஞர்தான். விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் அதனை சமாளிப்பதற்காக வழங்கப்படுவதுதான் அகவிலைப்படி உயர்வு.

இதனை புதிய சலுகை போல் சித்தரிப்பதும், காலந்தாழ்த்தி வழங்குவதும் நிலுவை தொகையினை மறுப்பதும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மத்தியில் கடுமையான மன வேதனையையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் காட்டிய வழியில் லட்சிய பாதையில் அயராது தமிழக மக்களின் நலனுக்காக உழைத்திடும் முதல்வர், ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய உயர்த்தப்பட்ட 4 சதவிகித அகவிலைப்படியினை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். அதேபோன்று, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்கிட வேண்டும். 1.4.2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தலைமை செயலக பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H