தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்காக பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 12) திறக்கப்படவுள்ளன.
முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் வரும் 14-ஆம் தேதி
முதல் தொடங்குகின்றன. தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்.29
முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2
வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம்
வகுப்புகளுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக
அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
Read More Click Here
Read More Click Here