நீட்
தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 538 மதிப்பெண் பெற்று மாநில
அளவில் இரண்டாம் இடம் பிடித்து, சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த
கட்டிட தொழிலாளி மகள் அன்னபூரணி சாதனை படைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாவட்டத்தின் கடைசி ஊர் என
அழைக்கும் உலகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டாங்காடு என்ற பகுதியில்
வசித்து கொண்டு கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் முருகன். இவருக்கு
வயது 45. இவரது மனைவி சித்ரா(40) வீட்டை கவனித்து வருகிறார். இந்த
தம்பதியின் மகள் அன்னபூரணிக்கு வயது 18. இவர் உலகம்பட்டி அரசு மேல்நிலைப்
பள்ளியில் 6 வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து தேர்வில் 600
க்கு 571 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
Read More Click Here
Read More Click Here