பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.08.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: புகழ்
குறள் :240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
விளக்கம்:
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.
பழமொழி :
Be just before you are generous
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு