என்ஜினீயரிங் படிப்புக்கான 2-வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 8ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. இதுவரை என்ஜினீயரிங் கல்லூரிகளில் 92,423 இடங்கள் நிரம்பி உள்ளன. இருப்பினும் 22 கல்லூரிகளில் இதுவரை ஒரு இடம் கூட நிரம்பாத நிலை உள்ளது.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நடந்து வருகின்றது. பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரிவினருக்கு 3 சுற்றுகளாக தமிழ்நாடு முழுவதும் 423 கல்லூரிகளில் உள்ள 1,87,227 இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது.
இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. முதல் சுற்றில் 30,096 இடங்கள் நிரம்பி இருந்தன. இதனை தொடர்ந்து 2-வது சுற்று கலந்தாய்வு கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி முடிவடைந்துள்ளது. 2வது சுற்று முடிவில் பொதுப்பிரிவில் 52,694 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் 9,633 இடங்களும் என மொத்தம் 62,327 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.
ஒட்டுமொத்த இரண்டாவது சுற்று கலந்தாய்வு முடிவில் மொத்தம் உள்ள 1,87, 858 இடங்களில் 92,423 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி இடங்களில் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இந்த 2 சுற்று கலந்தாய்வில் இதுவரை 22 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலையும் உள்ளது.
இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில் முதல் சுற்றிலிருந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் அதனுடன் தொடர்புடைய ஏ.ஐ. மெஷின் லேனில், தாவு அறிவியல் போன்ற படிப்புகள், எல்க்ட்ரானிகஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரில் படிப்புகளில் சேரவே அதிக மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் 2வது சுற்றில் கோர் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில் இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த கலந்தாய்வில் 1,01,589 மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.