பொறியியல் கல்வி விண்ணப்ப விநியோகம் குறித்து அண்ணா பல்கலை., இன்று ஆலோசனை:
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களின் விநியோகத்
தேதியை முடிவு செய்வற்கான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை அண்ணா
பல்கலைக்கழகம் இன்று நடத்தும் என கூறப்படுகிறது.
இன்றையக் கூட்டம் பல்கலைக்கழக அளவில் நடைபெறும் என்பதால், இதில், துணை
வேந்தர் மற்றும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அமைப்பின் செயலர்
உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள். இரண்டாவது கூட்டம் ஒரு வார காலத்திற்குள்
நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் மருத்துவக் கல்வி
இயக்ககம், அரசுத் தேர்வுத் துறை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்
இயக்குனர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு இரு ஆலோசனைக் கூட்டங்களும் முடிந்த பின்னர், விண்ணப்ப விநியோகத்
தேதி இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதல் பெற்ற பின்னர் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படும். இதனிடையே, தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான
கலந்தாய்வு இந்த ஆண்டு முன் கூட்டியே நடைபெறும் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...