தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
அரசு உதவி பெறும் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.
பள்ளி
தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவாரம் ஒப்புவித்தல்
போட்டியில் பங்கேற்ற மாணவர்களி
ல் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பிரிவில் 8ம் வகுப்பு மாணவி
ராஜேஸ்வரி முதல் பரிசையும், 7ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி மற்றும்
6ம் வகுப்பு மாணவர் ரஞ்சித் ஆகிய இருவரும் இரண்டாம் பரிசையும்,
பெற்றனர்.
3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பிரவில் 5ம் வகுப்பு
மாணவர் கார்த்திகேயன் இரண்டாம் பரிசையும், 3ம் வகுப்பு மாணவி கீர்த்திகா
மூன்றாம் பரிசையும், 4ம் வகுப்பு மாணவர் அஜய் பிரகாஷ் ஆறுதல்
பரிசையும், பெற்றனர்..இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள். தேவாரம்
பாடல்களும் விழாவில் பாடப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி
கூறினார்.பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்
பரிசு பொருள்களுடன் உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...