ஆசிரியர்கள் ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை
உயர்த்திக் கொள்ள, அரசின் சார்பில், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே,
2005க்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.
அதற்குப்பின் சேர்ந்தவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை
அடிப்படையில், சம்பளத்தில், 6 சதவீதம் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த முரண்பாட்டால், 2005க்கு முன்
சேர்ந்த சீனியர் ஆசிரியர்கள், 2005க்கு பின் பணியில் சேர்ந்தவர்களை விட,
குறைந்த ஊக்க ஊதியம் பெறுகின்றனர். இந்த முரண்பாட்டைப் போக்க, 2009 ஜூன்,
1ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.ஆசிரியர்களின் உயர்கல்வி
ஊக்க ஊதியத்தின் முரண்பாடுகளை, தலைமை ஆசிரியர்களே சரிசெய்து, அதற்கு
கல்வித் துறையில் அனுமதி பெறலாம் என, கூறப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு
செயலுக்கு வரவில்லை.
இதனால், அரசாணை பிறப்பித்து, எட்டு ஆண்டுகள் தாண்டிய பின்னும், ஊக்க ஊதியக்
குறைபாடு தீரவில்லை. மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...