அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கு,
தமிழக அரசு நடத்தும், ஒற்றை சாளர கவுன்சிலிங், நேற்று முன்தினம்
துவங்கியது. இரண்டு நாட்கள், தொழிற் கல்வி மாணவர்களுக்கு இடங்கள்
ஒதுக்கப்பட்டன.
இதில், 2,084 மாணவர்கள், கவுன்சிலிங்கிற்கு
அழைக்கப்பட்டனர்; 531 பேர் வரவில்லை. பங்கேற்றவர்களில், 72 பேர்,
தங்களுக்கு பிடித்த கல்லுாரியில், பிடித்த பாடப்பிரிவு இல்லாமல், இட
ஒதுக்கீடு பெறவில்லை. இறுதியில், 1,481 பேர் இடங்கள்ஒதுக்கீடு பெற்றனர்.
இதில், 1,041 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்.அரசு, அரசு உதவி பெறும்
கல்லுாரிகளில், மொத்தம், 155 இடங்களில், 153 இடங்களும்; சுயநிதி
கல்லுாரிகளில், 6,170 இடங்களில், 1,328 இடங்களும் நிரம்பின. அதிகபட்சமாக,
657 மாணவர்கள், மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளனர்.
எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், 204; எலக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன், 187; சிவில், 157; கம்யூ., சயின்ஸ், 110; ஐ.டி., 39,
ஏரோநாட்டிகல், 12; ஆட்டோமொபைல், 31; பயோ டெக்னாலஜி, மூன்று பேர் தேர்வு
செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...