ஆடைக் கட்டுப்பாட்டால் ஆசிரியர் படிப்பை துறந்த பெண்:
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹஸ்னா. இவரது கணவர் ஹர்ஷத் மொகமது. ஆசிரியர் வேலை பார்ப்பதையே ஹஸ்னா தன் லட்சியமாக கொண்டார். அதற்காக பயிற்சி பெறுவதற்காக, கேரளா நடுவதுல் முஜாஹிதின் என்ற இஸ்லாமிய அமைப்பு நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு சென்றார்.
அங்கு அவருக்கு சோதனை வந்தது. அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற வருபவர்கள் பர்தா அணியக்கூடாது என்பது விதிமுறை. பயிற்சி
நிறுவனத்தின் இந்த விதிமுறைக்கு ஹஸ்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவரது கணவர் ஹர்ஷத் மொகமது கூறுகையில், “பயிற்சிக்கு வருபவர்கள் புடவை மட்டும் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், புடவையை விட பர்தா அணிந்து வருவது எனது மனைவிக்கு வசதியாக இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதிப்பதில்லை.
தங்களது விதியை தளர்த்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, தான் ஆசையாக நேசித்த ஆசிரியர் படிப்பையே வேண்டாம் என எனது மனைவி மறுத்துவிட்டார்’’ என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பயிற்சி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இவரை போல் ஒருவருக்காக விதிகளை தளர்த்த முடியாது. அப்படி தளர்த்தினால் இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் வந்தபடி இருக்கும்’’ என தெரிவித்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹஸ்னா. இவரது கணவர் ஹர்ஷத் மொகமது. ஆசிரியர் வேலை பார்ப்பதையே ஹஸ்னா தன் லட்சியமாக கொண்டார். அதற்காக பயிற்சி பெறுவதற்காக, கேரளா நடுவதுல் முஜாஹிதின் என்ற இஸ்லாமிய அமைப்பு நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு சென்றார்.
அங்கு அவருக்கு சோதனை வந்தது. அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற வருபவர்கள் பர்தா அணியக்கூடாது என்பது விதிமுறை. பயிற்சி
நிறுவனத்தின் இந்த விதிமுறைக்கு ஹஸ்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவரது கணவர் ஹர்ஷத் மொகமது கூறுகையில், “பயிற்சிக்கு வருபவர்கள் புடவை மட்டும் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், புடவையை விட பர்தா அணிந்து வருவது எனது மனைவிக்கு வசதியாக இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதிப்பதில்லை.
தங்களது விதியை தளர்த்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, தான் ஆசையாக நேசித்த ஆசிரியர் படிப்பையே வேண்டாம் என எனது மனைவி மறுத்துவிட்டார்’’ என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பயிற்சி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இவரை போல் ஒருவருக்காக விதிகளை தளர்த்த முடியாது. அப்படி தளர்த்தினால் இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் வந்தபடி இருக்கும்’’ என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...