சென்னை: மருத்துவ படிப்புகளில், கூடுதலாக, 310 இடங்களுக்கு அனுமதி கோரி,
இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு
விண்ணப்பித்துள்ளது.
தமிழகத்தில், 22 அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும்
ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியுடன் சேர்த்து, 3,050 எம்.பி.பி.எஸ்.,
இடங்கள் உள்ளன. இதில், 456 இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்குக்கு
செல்கின்றன.
வரும், 2018 - 19ம் கல்வியாண்டில், மதுரை மற்றும் நெல்லை
மருத்துவ கல்லுாரிகளில், தலா, 100 இடங்கள்; செங்கல்பட்டு மருத்துவ
கல்லுாரியில், 50 இடங்களை கூடுதலாக அனுமதிக்க கோரி, எம்.சி.ஐ.,யிடம், தமிழக
அரசு விண்ணப்பித்துள்ளது.
அதேபோல, 13 அரசு மருத்துவ கல்லுாரிகளில்,
1,489 எம்.டி., - எம்.எஸ்., எனப்படும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான
இடங்கள் உள்ளன. இவற்றில், 60 இடங்களை கூடுதலாக கேட்டு, தமிழக அரசு
விண்ணப்பித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:
எம்.பி.பி.எஸ்.,
படிப்புக்கு, 250 இடங்களுக்கும், முதுநிலை மருத்துவ படிப்புக்கு, 60
இடங்களுக்கும் அனுமதி கோரி, எம்.சி.ஐ.,யிடம் விண்ணப்பித்து உள்ளோம்.
அனுமதி கிடைத்தால், வரும் கல்வியாண்டில், 310 கூடுதல் மருத்துவ இடங்களுக்கும் சேர்த்து, கவுன்சிலிங் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...