கடும் போட்டிகள் சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று விவேகம்.
அடுத்து என்ன செய்வது? என்று எல்லா காலக் கட்டங்களிலும் தெளிவாக அறிந்து இருப்பது தான் விவேகம்.
கடலின் ஆழத்தில் முத்தைக் கண்டு பிடிப்பது போல பிரச்சனைகளின் ஆழத்தில் முடிவை, தீர்வைக் கண்டு பிடிக்கிறது விவேகம்.
விவேகம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்து விவேகத்துடன் எதிர் கொண்டு கடந்து வந்தவர்களே இன்றைய வெற்றியாளர்கள்.,
ஜென் ஆசிரியரிடம் மூன்று இளைஞர்கள் வந்தார்கள்.
அவர்கள் ஜென்னிடம் தங்களை உங்கள் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டார்கள்..
அவர்களின் அறிவை சோதிக்க எண்ணிய ஜென் மறுநாள் தம்மை வந்து பார்க்குமாறு கூறினார்.
மறுநாள் அவர்கள் வரும்போது தமது காதில் ஓணான் புகுந்து தாம் இறந்து விட்டதாக சொல்லச் சொன்னார்.
மறுநாள்அந்த மூவரும் வந்தபோது முனிவரின் மனைவி அவர் ஏற்கனவே சொன்னவாறே சொன்னார்
முதலாமவன், "அவரது ஜாதகப்படி சனிதிசை என்பதால் இப்படி ஆகி இருக்கும்!"என்று வருத்ததோடு கூறி விட்டு அங்கே நிற்காமல் சென்று விட்டான்.
இரண்டாமவன், " முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்து இருக்கலாம்!"என்று சொல்லிவிட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.
மூன்றாமவன், முனிவரின் மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான்.
பின்னர்ஆணித்தரமாக. "ஆசிரியர் உயிரோடுதான் இருக்கிறார்!" என்றான்.
அதுவரை வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு இருந்த ஆசிரியர் வெளிப்பட்டார்..
அது..சரி..நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டார்.
"அய்யா, உங்களின் மறைவினால் வரக் கூடிய துக்கம் உங்கள் மனைவியின் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது என்பது நடக்காத செயல்.
எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.. விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் அந்த ஜென் ஆசிரியர்,,
ஆம்.,நண்பர்களே..,
எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகம் ஆகும்.
இருள் தடுமாறச் செய்கிறது. விவேகம், ஞானம் என்கிற வெளிச்சம் உற்சாகம் தருகிறது. அபரிதமான நம்பிக்கையைத் தருகிறது.. விடியலைக் காண்கிறது.💜🙏🏻❤
அடுத்து என்ன செய்வது? என்று எல்லா காலக் கட்டங்களிலும் தெளிவாக அறிந்து இருப்பது தான் விவேகம்.
கடலின் ஆழத்தில் முத்தைக் கண்டு பிடிப்பது போல பிரச்சனைகளின் ஆழத்தில் முடிவை, தீர்வைக் கண்டு பிடிக்கிறது விவேகம்.
விவேகம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்து விவேகத்துடன் எதிர் கொண்டு கடந்து வந்தவர்களே இன்றைய வெற்றியாளர்கள்.,
ஜென் ஆசிரியரிடம் மூன்று இளைஞர்கள் வந்தார்கள்.
அவர்கள் ஜென்னிடம் தங்களை உங்கள் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டார்கள்..
அவர்களின் அறிவை சோதிக்க எண்ணிய ஜென் மறுநாள் தம்மை வந்து பார்க்குமாறு கூறினார்.
மறுநாள் அவர்கள் வரும்போது தமது காதில் ஓணான் புகுந்து தாம் இறந்து விட்டதாக சொல்லச் சொன்னார்.
மறுநாள்அந்த மூவரும் வந்தபோது முனிவரின் மனைவி அவர் ஏற்கனவே சொன்னவாறே சொன்னார்
முதலாமவன், "அவரது ஜாதகப்படி சனிதிசை என்பதால் இப்படி ஆகி இருக்கும்!"என்று வருத்ததோடு கூறி விட்டு அங்கே நிற்காமல் சென்று விட்டான்.
இரண்டாமவன், " முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்து இருக்கலாம்!"என்று சொல்லிவிட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.
மூன்றாமவன், முனிவரின் மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான்.
பின்னர்ஆணித்தரமாக. "ஆசிரியர் உயிரோடுதான் இருக்கிறார்!" என்றான்.
அதுவரை வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு இருந்த ஆசிரியர் வெளிப்பட்டார்..
அது..சரி..நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டார்.
"அய்யா, உங்களின் மறைவினால் வரக் கூடிய துக்கம் உங்கள் மனைவியின் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது என்பது நடக்காத செயல்.
எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.. விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் அந்த ஜென் ஆசிரியர்,,
ஆம்.,நண்பர்களே..,
எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகம் ஆகும்.
இருள் தடுமாறச் செய்கிறது. விவேகம், ஞானம் என்கிற வெளிச்சம் உற்சாகம் தருகிறது. அபரிதமான நம்பிக்கையைத் தருகிறது.. விடியலைக் காண்கிறது.💜🙏🏻❤
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...