கந்தன் என்ற ஒரு மகா கஞ்சன் ஆலங்குடி என்ற ஊரில் வசித்து வந்தான். ஒரு நாள் விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு சென்றார்.
விமானம் மேலே கிளம்புவதையும் வானில் வட்டமிடுவதையும் கீழே இறங்குவதையும் இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த விமானி ஒருவர் நீங்கள் இருவரும் வாருங்கள் ஆளுக்கு நூறு ரூபாய் தான் வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம் என்றார். கஞ்சனுக்கு ஆர்வம் தான். ஆனால் செலவுக்கு பயந்து நாங்கள் வரவில்லை என்றான்.
அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி நீங்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல் உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது என்ன நடந்தாலும் நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டால் இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும் என்றார்.
கஞ்சன் தன் மனைவியுடன் விமானத்தில் ஏறி அமர்ந்தான். விமானம் தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன் சத்தம் போடாமல் இருந்தான். விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.
கஞ்சனுக்கு கை கொடுத்து நான் பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது வேறு யாராக இருந்தாலும் சத்தம் போட்டுருப்பார்கள். ஆனால் நீங்கள் சிறு சத்தம் எழுப்பவில்லை. எப்படி இது உங்களால் முடிந்தது? என்று கேட்டார் விமானி.
நான் கூட ஒரே ஒரு சமயம் என் மனைவி விமானத்தில் இருந்து கீழே விழுந்தபோது! கத்த நினைத்தேன். நல்லவேலை கத்தாமல் இருந்தேன். கத்தியிருந்தால் கட்டணம் செலுத்த வேண்டிருக்கும் என்றான் கஞ்சன். அதை கேட்ட விமானி மயங்கி விழுந்தார்.
நீதி :
சிக்கனம் இருக்கலாம் ஆனால் கஞ்சத்தனம் இருத்தல் கூடாது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...