------------------------------------------------
இரண்டொரு செய்திகளைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டு என்னும் சொல் வருடத்தைக் குறிக்கும்போது ”ஆண்டு காலம்” ( ஐம்பது ஆண்டு காலம் ) என்று எழுதுவது சரி. “ஆண்டுக் காலம்” தவறு. (இடையில் “க்” வராது.).
ஆண்டு என்னும் சொல் “அங்கே” என்று பொருள்படும் இடங்களில் ”ஆண்டுக் கண்டது” என்று “க்” சேர்த்து எழுத வேண்டும். “ஈண்டு” என்னும் சொல் “இங்கே” என்னும் பொருள் உடையதால் “ஈண்டுக் கேட்டனர்” என்றே “க்” சேர்த்து எழுத வேண்டும். “ஈண்டு கேட்டனர்” தவறு.
நாள்கள்..........................நாட்கள்
தாள்கள்..........................தாட்கள்
கோள்கள்.......................கோட்கள்
ஆள்கள்...........................ஆட்கள்
தேள்கள்..........................தேட்கள்
படைப்புகள்....................படைப்புக்கள்
அடைப்புகள்..................அடைப்புக்கள்
உடைப்புகள்...................உடைப்புக்கள்
பெயர்களுக்கு................பெயர்கட்கு
அவர்களுக்கு.................அவர்கட்கு
இவர்களுக்கு..................இவர்கட்கு
சுவர்களுக்கு...................சுவர்கட்கு
பள்ளிகளுக்கு.................பள்ளிகட்கு
மேலே முதல் வரிசையில் கண்டவண்ணம் எழுதுவது சரி. இரண்டாவது வரிசையில் கண்டிருப்பன பிழை வடிவங்கள். “கள்” விகுதியாக இருக்கும் இடங்கள் இவை. எனவே ‘மிகுதலும்’, ‘மாற்றம்’ அடைதலும் கூடாது. இயல்பாகவே இருக்க வேண்டும்.
( நாள் + கள் = நாள்கள்: ) (இதில் நாள் = பகுதி; கள் = விகுதி) “கள்” விகுதியாக வராமல் தனிச் சொல்லாக, மதுவைக் குறிப்பதாக, நாள் என்னும் சொல்லுடன் சேர்ந்து வரும்போது ”நாட்கள்” என்று ஆகும். அன்று இறக்கிய கள் என்பது அச்சொல்லுக்கு இங்கே பொருள்.
இதுபற்றிப் புலவர்களுக்கு இடையே வேறுபட்ட கருத்து இருக்கின்றது என்றாலும் முதுபெரும் புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் போன்றவர்கள் மேற் கூறியதே சரி என்று ஆதாரங்களுடன் விளக்குவதைக் கேட்டிருக்கிறேன்.
இடையினம், வல்லினம்:
மதிப்புக்குரிய...............மதிப்புக்கு உரிய
மதிப்புக்குரிய..............மதிப்புக் குறிய,
............................................(மதிப்பில் மட்டமான)
கோருகிறேன்..............வேண்டிக் கொள்ளுகிறேன்
கோறுகிறேன்...............(கோறல்=கொலை செய்தல்)
.........................
...................கொலை செய்கிறேன்.
அக்கரை..........................அந்தக் கரை
அக்கறை.........................பற்று (Interest)
இச் சொற்களின் பொருள் வேறுபாடு அறிந்து பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கு மற்றொன்றைப் பயன் படுத்தினால், பொருளே வேறுபட்டுவிடும். ஒரு மேல் அலுவலருக்கு ஒருவர் “மதிப்புக்குறிய ஐய !” என்று விளித்து மடல் எழுதினால், அதன் பொருள் “மட்டமான ஐயா” என்றே ஆகும். இதை இந்நூலாசிரியர் ஆய்வு செய்த அலுவலகம் ஒன்றில், அவ்வலுவலருக்குச் சுட்டிக் காட்டிய போது திடுக்கிட்டார், தன் மேல் அலுவலருக்கு அப்படி எழுதிவிட்ட ஓர் அலுவலர். திருமண அழைப்புகளில் மணமக்களை வாழ்த்தக் கோறுகிறேன் என்று எழுதுகிறார்களே ! இதன் பொருள் என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் !
இடையின வல்லின வேறுபாட்டை மேலும் உணர, பின்வரும் வரிசைகளையும் கவனிக்க !
கூரிய.........................= கூரான
கூறிய........................= சொன்ன
எரி...............................= தீப்பற்றி எரி
எறி..............................= வீசு
கரி...............................= அடுப்புக்கரி
கறி..............................= உண் பொருள்
மருப்பு.......................= கொம்பு
மறுப்பு.......................= எதிர்த்துக் கூறல்
பொருப்பு..................= மலை
பொறுப்பு..................= Responsibility
எண்ணெய்..............= எள் நெய் (OIL)
எண்ணை.................= Number ஐ
இரத்தல்...................= பிச்சை எடுத்தல்
இறத்தல்..................= சாதல்
குரங்கு......................= வானரம்
குறங்கு.....................= தொடை
----
----------------------------------------------------------------
(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய “தமிழில் எழுதுவோம்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
---------------------------------------------------------------
ஆக்கம் & இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,கடகம்,32]
{17-08-2019}
இரண்டொரு செய்திகளைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டு என்னும் சொல் வருடத்தைக் குறிக்கும்போது ”ஆண்டு காலம்” ( ஐம்பது ஆண்டு காலம் ) என்று எழுதுவது சரி. “ஆண்டுக் காலம்” தவறு. (இடையில் “க்” வராது.).
ஆண்டு என்னும் சொல் “அங்கே” என்று பொருள்படும் இடங்களில் ”ஆண்டுக் கண்டது” என்று “க்” சேர்த்து எழுத வேண்டும். “ஈண்டு” என்னும் சொல் “இங்கே” என்னும் பொருள் உடையதால் “ஈண்டுக் கேட்டனர்” என்றே “க்” சேர்த்து எழுத வேண்டும். “ஈண்டு கேட்டனர்” தவறு.
நாள்கள்..........................நாட்கள்
தாள்கள்..........................தாட்கள்
கோள்கள்.......................கோட்கள்
ஆள்கள்...........................ஆட்கள்
தேள்கள்..........................தேட்கள்
படைப்புகள்....................படைப்புக்கள்
அடைப்புகள்..................அடைப்புக்கள்
உடைப்புகள்...................உடைப்புக்கள்
பெயர்களுக்கு................பெயர்கட்கு
அவர்களுக்கு.................அவர்கட்கு
இவர்களுக்கு..................இவர்கட்கு
சுவர்களுக்கு...................சுவர்கட்கு
பள்ளிகளுக்கு.................பள்ளிகட்கு
மேலே முதல் வரிசையில் கண்டவண்ணம் எழுதுவது சரி. இரண்டாவது வரிசையில் கண்டிருப்பன பிழை வடிவங்கள். “கள்” விகுதியாக இருக்கும் இடங்கள் இவை. எனவே ‘மிகுதலும்’, ‘மாற்றம்’ அடைதலும் கூடாது. இயல்பாகவே இருக்க வேண்டும்.
( நாள் + கள் = நாள்கள்: ) (இதில் நாள் = பகுதி; கள் = விகுதி) “கள்” விகுதியாக வராமல் தனிச் சொல்லாக, மதுவைக் குறிப்பதாக, நாள் என்னும் சொல்லுடன் சேர்ந்து வரும்போது ”நாட்கள்” என்று ஆகும். அன்று இறக்கிய கள் என்பது அச்சொல்லுக்கு இங்கே பொருள்.
இதுபற்றிப் புலவர்களுக்கு இடையே வேறுபட்ட கருத்து இருக்கின்றது என்றாலும் முதுபெரும் புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் போன்றவர்கள் மேற் கூறியதே சரி என்று ஆதாரங்களுடன் விளக்குவதைக் கேட்டிருக்கிறேன்.
இடையினம், வல்லினம்:
மதிப்புக்குரிய...............மதிப்புக்கு உரிய
மதிப்புக்குரிய..............மதிப்புக் குறிய,
............................................(மதிப்பில் மட்டமான)
கோருகிறேன்..............வேண்டிக் கொள்ளுகிறேன்
கோறுகிறேன்...............(கோறல்=கொலை செய்தல்)
.........................
அக்கரை..........................அந்தக் கரை
அக்கறை.........................பற்று (Interest)
இச் சொற்களின் பொருள் வேறுபாடு அறிந்து பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கு மற்றொன்றைப் பயன் படுத்தினால், பொருளே வேறுபட்டுவிடும். ஒரு மேல் அலுவலருக்கு ஒருவர் “மதிப்புக்குறிய ஐய !” என்று விளித்து மடல் எழுதினால், அதன் பொருள் “மட்டமான ஐயா” என்றே ஆகும். இதை இந்நூலாசிரியர் ஆய்வு செய்த அலுவலகம் ஒன்றில், அவ்வலுவலருக்குச் சுட்டிக் காட்டிய போது திடுக்கிட்டார், தன் மேல் அலுவலருக்கு அப்படி எழுதிவிட்ட ஓர் அலுவலர். திருமண அழைப்புகளில் மணமக்களை வாழ்த்தக் கோறுகிறேன் என்று எழுதுகிறார்களே ! இதன் பொருள் என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் !
இடையின வல்லின வேறுபாட்டை மேலும் உணர, பின்வரும் வரிசைகளையும் கவனிக்க !
கூரிய.........................= கூரான
கூறிய........................= சொன்ன
எரி...............................= தீப்பற்றி எரி
எறி..............................= வீசு
கரி...............................= அடுப்புக்கரி
கறி..............................= உண் பொருள்
மருப்பு.......................= கொம்பு
மறுப்பு.......................= எதிர்த்துக் கூறல்
பொருப்பு..................= மலை
பொறுப்பு..................= Responsibility
எண்ணெய்..............= எள் நெய் (OIL)
எண்ணை.................= Number ஐ
இரத்தல்...................= பிச்சை எடுத்தல்
இறத்தல்..................= சாதல்
குரங்கு......................= வானரம்
குறங்கு.....................= தொடை
----
(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய “தமிழில் எழுதுவோம்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
---------------------------------------------------------------
ஆக்கம் & இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,கடகம்,32]
{17-08-2019}
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...