10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவு விவரங்களை அனுப்பி வைக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு:
10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவு விவரங்களை அனுப்பி வைக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது..
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு அடிப்படையில், பள்ளியின் தரம்
நிர்ணயிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் அதிக
மதிப்பெண்களுடன்,100 சதவீதம் தேர்ச்சி பெற்றால், மாணவர்களின் சேர்க்கை
அதிகரிக்கும்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தால், முதன்மை கல்வி அலுவலர்,
கலெக்டர் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். நூறு சதவீத தேர்ச்சி
காட்டுவதற்காக, சரியாக படிக்காத, 10ம் வகுப்பு மாணவர்களை, தலைமை
ஆசிரியர்கள் தேர்வு எழுத தடை விதிக்கின்றனர்.
முதல் கட்டமாக, மாணவர்களுக்கு நடந்த செய்முறை தேர்வில், 10 சதவீதம்
மாணவர்கள், "ஆப்சென்ட்&' ஆகியுள்ளனர். இது குறித்து, "தேறாத மாணவர்கள்,
ஆப்சென்ட் ஆக்கும் திட்டம்" என, மார்ச் 7, தினமலர் நாளிதழில் செய்தி
வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து,
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், 10ம்
வகுப்பு படிக்கும் மாணவர்களின் வருகைப் பதிவு, தேர்வு எழுத
விண்ணப்பித்துள்ளாரா, இல்லை என்றால் அதற்கான காரணம் உள்ளிட்ட அனைத்து
விவரங்களையும் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்மாதம், 27ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு துவங்க உள்ள நிலையில், இந்த உத்தரவால், ஆப்சென்ட் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...