103 மாணவர் விடுதிகளில் சூரிய சக்தி மின் நிலையம்: 2013-14ல் அமல் தமிழக அரசு உத்தரவு:
மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசின், 103 மாணவர் விடுதிகளில், சூரிய சக்தி மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து, ஐந்தாண்டுகள் பராமரித்து, மின் உற்பத்தி செய்யும் வகையில், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளன.
தமிழகத்தின் மின் தேவையில், 4,000
மெகா வாட், பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில், மின் வெட்டு தொடர்ந்து
அமலில் இருந்து வருகிறது. மின் பற்றாக்குறையை சரிகட்ட, அரசு பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கு,
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அரசு அலுவலகங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க,
கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு, முதல்வர் மற்றும் கவர்னர் அலுவலங்களில்,
சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன், அடுத்த கட்டமாக, அரசின் மாணவர் விடுதிகளில், சூரிய சக்தி மின்
உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்
சார்பில், மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,
சீர்மரபினர் மற்றும் இஸ்லாமிய பெண்கள் விடுதிகள் உள்ளன.
இவற்றில், மாணவர்கள் இலவசமாக தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிகளின்
மின் தேவையை பூர்த்தி செய்வதில், பெரும் சிக்கல் நிலவுகிறது. தொடர்
மின்வெட்டு காரணமாக, மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
எனவே, மாநிலத்தில் உள்ள, அரசின், 103 மாணவர் விடுதிகளில், சூரிய சக்தி
மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விடுதியிலும், 1,000 வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் வகையில், சூரிய
சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம், செம்மந்தலம் பகுதியில் உள்ள மாணவர் விடுதியில்,
முன்னோட்டமாக அமைக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி நிலையம், நல்ல பலன்
கிடைத்ததைத் தொடர்ந்து, மற்ற மாணவர் விடுதிகளில், சூரிய சக்தி மின்
உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
மாணவர் விடுதிகளில் அமைக்கப்படும், சூரிய சக்தி மின் உற்பத்தி
நிலையங்களை, ஐந்தாண்டுகளுக்கு பராமரித்து, மின் உற்பத்தியை மேற்கொள்ளும்
பணியை, உற்பத்தி நிலையங்களை அமைக்கும் நிறுவனங்களே செய்யவேண்டும் என்ற
அடிப்படையில், பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.
ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் முடிந்து, வரும் கல்வியாண்டு முதல், மாணவர்
விடுதிகளுக்கு, சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர்
கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...