வேளாண்மைப் பல்கலையில் இளநிலை படிப்புக்கு விண்ணப்பம்:
கோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தில், 2013-14 கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர
மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளநிலையில் - பி.எஸ்சி.,யில் (வேளாண்மை, தோட்டக்கலை, பாரஸ்ட்ரி, ஹோம்
சயின்ஸ், சேரி கல்சுரல்), பி.டெக்.,(பயோ-டெக்னாலஜி, தோட்டக்கலை,
பயோ-இன்பர்மேடிக்ஸ், அக்ரிகல்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல்
இன்ஜினியரிங், புட் புராசஸ் இன்ஜினியரிங், எனர்ஜி அன்ட் என்விரான்மென்டல்
இன்ஜினியரிங்) பி.எஸ்., (அக்ரி பிசினஸ் மேனஜ்மென்ட்) ஆகிய படிப்புகள்
வழங்கப்படுகின்றது.
விண்ணப்பதார்கள் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல்
மற்றும் விலங்கியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்திருக்க
வேண்டும்.
பிளஸ் 2வில் (Vocational Stream) உயிரியல் மற்றும் வேளாண் செயல்முறை
பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பி.எஸ்சி., (அக்ரிகல்சுரல்,
ஹார்டிகல்சுரல், பாரஸ்ட்ரி), பி.டெக்., அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங்) ஆகிய
பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு வயது வரம்பு இல்லை.
தமிழ்நாட்டினை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே பட்டப்படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மை
இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்த பின், பூர்த்தி செய்த
விண்ணப்பத்தினை இணையதளத்திலிருந்து அச்சுப்பதிவு (print out) எடுத்து
அதனுடன் தேவையான சான்றிதழை இணைத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர
வேண்டிய கடைசி நாள் ஜூன் 7 ஆகும். மேலும் விரிவான தகவல்களுக்கு
www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தில் அல்லது 0422 - 6611345,
6611346 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம்.