மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் விநியோகம்:
2013, ஜுன் மாதம் 19-ஆம் தேதி தொடங்கி ஜுலை 1-ஆம்
தேதி வரை நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுத ஆன்-லைனில்
விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட
அனுமதிச் சீட்டுகள் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்படும்.
மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவும்,
தனித்தேர்வர்களாகவும் தேர்வெழுதி தோல்வி அடைந்து / வருகை புரியாது, தற்போது
இச்சிறப்புத் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, ஒவ்வொரு
கல்வி மாவட்டத்திலும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டு விநியோக மையத்தில் அனுமதி சீடினை பெற்றுக் கொள்ளலாம். தேர்வர்கள்
தங்களது பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தெரிவித்து தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை, சென்னை-2, அண்ணாசாலை, மதரசா -ஐ- ஆசாம்
மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டிலேயே அவர்களுக்குரிய பதிவெண் மற்றும் தேர்வு
மையம் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வர்கள் அம்மையத்தில்
தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை பெற்றபிறகு, அதனை ஒரு
நகலெடுத்து (Photocopy) தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். அசலினை
தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் முதல் நாளன்று தேர்வு மையத்தில்
ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்
தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள்
கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத்
தேர்விற்கும் வருகை புரிய வேண்டும்.
மேலும் செய்முறை மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வுகளைச்
செய்யவேண்டிய தனித்தேர்வர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள
தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி மேற்காண் தேர்வுகளைச்
செய்திடுமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...