ஜிப்மர் மருத்துவமனையில் உலக பொது சுகாதாரப் பள்ளி:
உலக பொது சுகாதாரப் பள்ளி, ஜிப்மர் மருத்துவமனையில், துவக்கப்படுகிறது. இது குறித்து, ஜிப்மர் இயக்குனர், ரவிக்குமார் கூறியதாவது:ஜிப்மர் மருத்துவமனையில், 12வது ஐந்தாவது திட்டத்தில், உலக பொது சுகாதார பள்ளி துவங்கப்படுகிறது. இங்கு, எம்.பி.எச்., (மாஸ்டர் ஆப் பப்ளிக் ஹெல்த்) படிப்பு தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப்பள்ளி, அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படும்.
புதிய பள்ளிக்கான கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு, 150 கோடி ரூபாய்
செலவில் அமைக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., படிப்பை, அடிப்படை கல்வியாக
கொண்டு, எம்.பி.எச்., படிப்பில், மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர்.
கல்வி, ஆய்வு மற்றும் செய்முறை என, படிப்பும் பயிற்சியும் இரண்டு
ஆண்டுக்கு, வகைப்படுத்தப்படும். பொது சுகாதாரக் கல்வி பயிலும் மாணவ,
மாணவியருக்கு, அமெரிக்க பேராசிரியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய
மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், பயிற்சி அளிப்பர்.
சமூகத்தில் நிலவும் பருவ நிலை நோய், ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று நோய்,
மக்களிடையே பரவும் கிருமி நோய்கள் பற்றி, விரிவாக கற்றுக்கொள்ள வாய்ப்பு
ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, கடந்த 2ம் தேதி, நடந்தது.
விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. தேர்வு முடிவு, இந்த வார
இறுதியில் வெளியாகும் என, ஜிப்மர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...