பி.இ. கலந்தாய்வு வெளியூர் மாணவர்களுக்கு 50% பஸ் கட்டண சலுகை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க வெளியூரிலிருந்து வரும் மாணவர்களுக்கு பஸ் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கலந்தாய்வுக்காக மாணவர்கள் தங்களுடன் அழைத்து வரும் ஒருவருக்கும் 50 சதவீத பஸ் கட்டண சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களிலிருந்து பி.இ. கலந்தாய்வுக்கு வரும்
மாணவர்களும், அவர்கள் உடன் அழைத்து வரும் ஒருவரும், அரசுப் போக்குவரத்துக்
கழக பஸ்களில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம். 50 சதவீத கட்டண சலுகை இரு
வழிப்பயணத்தின்போதும் வழங்கப்படும். இந்த சலுகையைப் பெற, மாணவர்களின்
கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தின் நகலை அரசுப் போக்குவரத்துக் கழக
அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தக் கடிதத்தின் நகலில் அலுவலர் சான்றளித்த பின் சலுகைக் கட்டணத்தில்
பயணிக்கலாம். கலந்தாய்வு முடிந்து திரும்பிச் செல்லும்போதும் அதே
நடைமுறையைப் பின்பற்றுமாறு அந்த செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...