பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை(26.07.2013) வெளியீடு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு
வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண்ணில் மாறுதல் உள்ள மாணவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை
ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 5 முதல் 8-ஆம் தேதி
வரை சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில்
பெற்றுக்கொள்ளலாம்.
மறுகூட்டல் கட்டணம் கணக்கில் வரப்பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இப்போது
முடிவுகள் வெளியிடப்படுகிறது. மறுகூட்டல் முடிவு பெறாத மாணவர்கள், கட்டணம்
செலுத்தியதற்கான பாரத ஸ்டேட் வங்கி சலானின் பின்புறம் தங்களது பதிவெண்ணைக்
குறிப்பிட்டு நேரிலோ,அல்லது தபாலிலோ இணை இயக்குநர் (பணியாளர்), அரசுத்
தேர்வுகள் இயக்ககம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அவ்வாறு அனுப்பினால் மட்டுமே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...