6-வது ஊதியக் குழு பரிந்துரைகள்: முரண்பாடுகளை களைந்து உத்தரவு:
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான
6-வது ஊதிய குழு பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களைந்து தமிழக அரசு
உத்தரவு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 6-வது ஊதியக் குழுவின்
பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தியபோது
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் சிலருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்த
பரிந்துரைகள் அமுல்படுத்திய போது சில மூத்த ஊழியர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் சம்பள விகிதத்தில் மாறுபாடு ஏற்பட்டன. இந்த முரண்பாடுகளை
களைய ஐ.ஏ.எஸ்.
அதிகாரியின் தலைமையில் தமிழக அரசு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவிடம் ஆசிரியர்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின்
பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து
கோரிக்கைகளை பரிசீலித்த அரசின் குழு, தனது பரிந்துரைகளை நிதித்துறை
அமைச்சகத்திடம் வழங்கியது. இதனை ஏற்று அரசு உத்தரவினை நிதித்துறை
புதன்கிழமை வெளியிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இது
குறித்த முழு விவரங்
கள் நமது இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...