புதுச்சேரி மருத்துவ கவுன்சிலிங்: 20 சதவீதம் பேர் ஆப்சென்ட்:
முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில, விண்ணபித்த மாணவர்களின் 80 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றனர்.மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் கடந்த 6ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடந்தது. மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த 3,361 மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பட்டு, ஆறு பிரிவுகளாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
சராசரியாக தினமும் 800 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு
அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிற்கும் 100 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.
முதற்கட்ட மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் முடிவில் 2,680 வந்தனர்.
அதாவது விண்ணப்பித்த மாணவர்களின் 80 சதவீத பேர் கவுன்சிலிங்கிற்கு
வந்துள்ளனர்.
இவர்களில் 1,029 பேர் சீட்டுகளை தேர்வு செய்துள்ளனர். 20
சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். ஒரு எம்.பி.பி.எஸ்., உட்பட 6
சீட்கள் மட்டுமே காலியிடம் ஏற்பட்டுள்ளது.