தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு:
திருவள்ளூர்: மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான தேசிய இளைஞர் விருதுக்கு, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.ஆண்டுதோறும், ஜனவரி, 12ம் தேதி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும், தேசிய அளவிலான இளைஞர் விழாவில், மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும், 13 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கும் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும், தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
வரவேற்கப்படுகின்றன.ஆண்டுதோறும், ஜனவரி, 12ம் தேதி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும், தேசிய அளவிலான இளைஞர் விழாவில், மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும், 13 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கும் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும், தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
01.04.2012 முதல், 31.03.2013 வரையிலான காலத்திற்கு செய்த
இளைஞர் நலப் பணிகளுக்காக விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதன்படி,
இளைஞர்களுக்கான விருது, தனி நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசு வழங்கப்படும். இப்பரிசு, 25 பேருக்கு மட்டுமே வழங்கப்படும். இதற்கு
முன் விருது பெற்றவர்கள், இந்த ஆண்டுக்கான விருது பெற விண்ணப்பிக்க இயலாது.
மத்திய, மாநில, பல்கலைக் கழகங்கள் மற்றும் இதர அரசு
நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், இந்த விருது பெற விண்ணப்பிக்க தகுதி
கிடையாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசு வழங்கப்படும். குறிப்பிட்ட ஜாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய
நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பங்கள் மாவட்ட
விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் கிடைக்கும்.
மேலும், www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வரும், 31ம் தேதிக்குள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியர்
பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர். அலைபேசி: 99403 41482.
இத்தகவலை, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...