குறிக்கோளை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும்: முன்னாள் டிஜிபி., நட்ராஜ் அறிவுரை:
குறிக்கோளை உணர்ந்து, அதனை முன் வைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்" என கல்லிடைக்குறிச்சி பள்ளியில் நடந்த விழாவில் தமிழக முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் பேசினார்.கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23ம் தேதி துவங்கி, பல்வேறு நிகழ்வுகளாக ஆறு நாட்கள் நடந்து வந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடந்தது. தமிழக முன்னாள் டி.ஜி.பி.,யும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணய குழு முன்னாள் தலைவருமான நட்ராஜ் நூற்றாண்டு நினைவு கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில்,
"எல்லோரையும் உருவாக்கிய பெருமை கொண்டது கல்வி கூடம்.
திலகர் என்றதும் ஊக்கம் வரும். ரத்த நாளங்கள் உறுதி பெறும்.
ஒவ்வொருவரிடமும் நல்ல நம்பிக்கை, குணாதிசயம் இருக்க வேண்டும். அதை
வளர்ப்பது கல்வி கூடம். சேவை மனப்பான்மையை உருவாக்கும் முக்கிய இடம்
பள்ளிக் கூடம்.
எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டியது தான் தற்போது
நாட்டிற்கு தேவை. மாணவர்கள் குறிக்கோளை உணர்ந்து, அதனை முன் வைத்து செயல்பட
வேண்டும். அப்போது தான் வெற்றி இலக்கை அடைய முடியும்" என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...