அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை தலைமை ஆசிரியர்கள் பாரபச்சமின்றி கையாளவேண்டும்-இயக்குனர் உத்தரவு:
அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதிவேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. காலையில் தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாலையில் முன்கூட்டியே செல்வதாக புகார்கள் எழுகின்றன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.