ஒரு துறை /நிறுவனத்தில் இருந்து வேறு துறைக்கு மாறுபவர்கள் வருங்கால வைப்புநிதி கணக்கை Onlineல் தாங்களே மாற்றலாம்-புதிய சேவை அறிமுகம்:
ஆன்லைனில் பிஎப் கணக்குகளை மாற்றும் வசதி, வரும் சுதந்திர தினம் முதல்,
நாடு முழுவதும் அமலாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 13 லட்சம் பேர்
பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தொழி லாளர் வருங்கால
வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) அதிகாரிகள் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பத் துறையின் பணியாற்றுபவர்கள் அடிக்கடி நிறுவனத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதுபோன்று பல்வேறு துறையினர் உள்ளனர். வேறு சிலர் சம்ளம் உள்ளிட்ட காரணங்களுக்காக வேறு நிறுவனத்துக்கு மாறுகின்றனர். இவர்கள் தங்களுடைய பிஎப் கணக்கை மாற்ற கஷ்டப்பட வேண்டியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அளித்து ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அந்த நிலையை மாற்றி, பிஎப் அலுவலகங்களை தேடி அலையாமல் நேரடியாக இணையதளத்தில் பிஎப் கணக்கை மாற்றக் கோரும் வசதி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அறிமுகமாகிறது. நிறுவனம் மாறியவர்கள் தங்கள் புதிய நிறுவனத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வசதியை பயன்படுத்துவதற்கு டிஜிட்டல் கையெழுத்து பதிவு அவசியம். இதனால் அடுத்த 2 வாரங்களுக்கு நிறுவன உரிமையாளர்களின் டிஜிட்டல் கையெழுத்தை பதிவு செய்யும் பணி நடக்க உள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் ஆண்டுதோறும் நிறுவனம் மாற்றும் 13 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...