ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்:
விருதுநகரில் அசிரியர் தகுதித் தேர்வில் இட
ஒதுக்கீடு அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
அகில இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று நடந்த
ஆர்ப்பாட்டத்திற்கு ஆகிலந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர்
ஆர்.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கணேசமூர்த்தி, மாவட்ட
துணைச் செயலாளர் எஸ்.டிமிட்ரோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை
உறுப்பினருமான டி.ராமசாமி, வட்டார செயலாளர் எஸ்.சீனிவாசன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில், ஆசிரியர் தகுதித் தேர்வை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிர்ணயம்
செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப
வேண்டும். ஆங்கில வழிக்கல்வியை கைவிட்டு தமிழ் வழிக் கல்விக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட
குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், வட்டார துணை செயலாளர் காரஸ் மார்க்ஸ்
உள்ளிட்ட அகிலந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...