மாணவர்களுக்கான இலவச பொருட்களை பள்ளியில் வழங்க கோரிக்கை:
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், இலவச சீருடையை, நேரிடையாக பள்ளிகளுக்கே வழங்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, ஆண்டுக்கு மூன்று செட் சீருடை, முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என மூன்று முறை நோட்டு, புத்தகங்கள், செருப்பு, புத்தக பை, ஜாமன்றி பாக்ஸ் என 14 வகையான இலவச பொருட்களை வழங்கி வருகிறது.
இவை அனைத்தையும், அந்தந்த ஒன்றியத்தில் உள்ள தொடக்க கல்வி
அலுவலகத்திலேயே இறக்கி வைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு பிரித்து
வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு
வரை, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளும் உண்டு.
இப்பள்ளி ஆசிரியர்கள் இலவச பொருட்களை, ஒவ்வொரு முறையும்
வேன் பிடித்து, சொந்த செலவில் எடுத்து செல்கின்றனர். இதை தவிர்க்க, அரசே
மதுபான கடைகளுக்கும், ரேசன் கடைகளுக்கும், பள்ளிகளுக்கான சத்துணவு
மையங்களுக்கும், சரக்குகளை இறக்கி செல்வது போல், ஒன்றிய வாரியாக உள்ள
பள்ளிகளுக்கும், இலவச பொருட்களை இறக்கி செல்ல வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...