புதிய தொழில்நுட்ப கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் வழங்க அனுமதிப்பது குறித்து வரும் 31ம் தேதி டில்லியில் நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,)விடம் இருந்து,
இந்த அதிகாரம் சமீபத்தில் பறிக்கப்பட்டு, பல்கலைக்கழக மானிய குழுவிடம்
(யு.ஜி.சி.,) வழங்கப்பட்டது. கல்லூரிகளுக்கு, பல்கலைகள் அங்கீகாரம்
வழங்கும் எனவும் ஒட்டுமொத்த உயர்கல்வி தரத்தை, யு.ஜி.சி., மேற்பார்வையிடும்
எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நிகர்நிலை பல்கலைகள், புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க
அனுமதிக்கப்படுமா என்பது குழப்பமாக உள்ளது. இந்நிலையில், 31ம் தேதி,
டில்லியில் நடக்கும் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என,
யு.ஜி.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, யு.ஜி.சி., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: யு.ஜி.சி.,
தலைவர் வேத் பிரகாஷ் தலைமையில், 31ம் தேதி டில்லியில் கூட்டம் நடக்கிறது.
இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு, நாடு முழுவதும் உள்ள, தொழில்நுட்ப
பல்கலைகளே, அங்கீகாரம் வழங்கலாம்.
அதேபோல், புதிய கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, சம்பந்தபட்ட அதிகார
வரம்பில் உள்ள பல்கலைகள், அங்கீகாரம் வழங்கலாம். உயர்கல்வியில் மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகள், புதிய விதிமுறைகள் குறித்து முடிவு எடுக்க, 12ம்
தேதி வரை கருத்துகள் பெறப்பட்டன.
தற்போது 30ம் தேதி வரை, கருத்துகளை தெரிவிக்க கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகள் 31ம் தேதி கூட்டத்தில்
விவாதிக்கப்படும். இவ்வாறு, யு.ஜி.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...