பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.பத்ம விருதுகள்பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ என 3 பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.ஆண்டுதோறும்,
குடியரசு தினத்தையொட்டி, மத்திய அரசு இந்த விருதுகளை அறிவிப்பது வழக்கம்.
அதுபோல், இந்த ஆண்டு பத்ம விருதுகளை பெறுவோர் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலுடன் இப்பட்டியல் வெளியிடப்பட்டது.127 பேர்இதன்படி, பாரதரத்னாவுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது உயரிய ‘சிவில்’ விருதான ‘பத்ம விபூஷண்’ விருதுக்கு 2 பேரும், ‘பத்ம பூஷண்’ விருதுக்கு 24 பேரும், ‘பத்மஸ்ரீ’ விருதுக்கு 101 பேரும் என மொத்தம் 127 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 27 பேர் பெண்கள் ஆவர். 7 பேர், வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் ஆவர். 3 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக வழங்கப்படுகிறது.பத்ம விபூஷண்‘பத்ம விபூஷண்’ விருதுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ. ஆர்.) முன்னாள் தலைவர் டாக்டர் ரகுநாத் ஏ.மஷேல்கர், யோகா குரு பி.கே.எஸ்.அய்யங்கார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.பி.கே.எஸ்.அய்யங் கார், 1918-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி பிறந்தவர். ‘அய்யங்கார் யோகா’ என்ற அமைப்பை நிறுவியவர். உலகின் முன்னோடி யோகா ஆசிரியர் களில் ஒருவராக கருதப்படுபவர்.கமல்ஹாசன்நாட்டின் 3-வது உயரிய ‘சிவில்’ விருதான பத்ம பூஷண் விருது, பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்து, டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், பேட்மிண்டன் வீரர் கோபிசந்த், பிரபல ‘கடம்’ வித்துவான் விநாயக்ராம், கர்நாடக சங்கீத பாடகி பர்வீன் சுல்தானா, நீதிபதி தல்வீர் பண்டாரி, எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் ஆகியோர் உள்பட 24 பேர், ‘பத்ம பூஷண்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.பத்மபூஷண் விருதுபெறும் கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம் மிகவும் மூத்த கலைஞராவார். இவர் தனது 12-வது வயதில் இருந்தே பெரிய பாடகர்களுக்கு கடம் வாசித்து வருகிறார். 66-ம் ஆண்டில் ஐ.நா.சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும்போது இவர் தான் கடம் வாசித்தார். கடம் வித்வான்களில் பத்ம விருது பெறும் முதல் கலைஞரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.பத்மஸ்ரீஇந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், ‘ஸ்குவாஷ்’ வீராங்கனை தீபிகா பலிக்கல், இந்தி நடிகர் பரேஷ் ராவல், இந்தி நடிகை வித்யா பாலன், டைரக்டர் சந்தோஷ் சிவன் உள்ளிட்டோர் ‘பத்மஸ்ரீ’ விருது பெறுகின்றனர். மத்திய மந்திரி சரத்பவாரின் சகோதரரும், சாகல் செய்தித்தாள் குழும அதிபருமானபிரதாப் கோவிந்தராவ் பவார், தமிழக விஞ்ஞானி டாக்டர் அஜய் குமார் பரிடா, தமிழக தொழில் அதிபர் மல்லிகா சீனிவாசன், மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, கபடி வீராங்கனை சுனில் தபாஸ், மலை ஏற்ற வீரர்கள் லவ் ராஜ்சிங் தர்மசக்து, மம்தா சோதா, சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர் போனிபேஸ் பிரபு, பிரபல நரம்பியல் நிபுணர் சுனில் பிரதான், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் தேனும்கல் பவுலோஸ் ஜேக்கப், தமிழக யுனானி மருத்துவர் ஹகீம் சையது கலீபதுல்லா, மருத்துவர் ராஜேஷ் குரோவர், நாடக கலைஞர் பன்சி கவுல் உள்பட 101 பேருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்படுகிறது.எப்போது வழங்கப்படும்?இந்த விருதுகளை, வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல், இந்த ஆண்டு பத்ம விருதுகளை பெறுவோர் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலுடன் இப்பட்டியல் வெளியிடப்பட்டது.127 பேர்இதன்படி, பாரதரத்னாவுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது உயரிய ‘சிவில்’ விருதான ‘பத்ம விபூஷண்’ விருதுக்கு 2 பேரும், ‘பத்ம பூஷண்’ விருதுக்கு 24 பேரும், ‘பத்மஸ்ரீ’ விருதுக்கு 101 பேரும் என மொத்தம் 127 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 27 பேர் பெண்கள் ஆவர். 7 பேர், வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் ஆவர். 3 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக வழங்கப்படுகிறது.பத்ம விபூஷண்‘பத்ம விபூஷண்’ விருதுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ. ஆர்.) முன்னாள் தலைவர் டாக்டர் ரகுநாத் ஏ.மஷேல்கர், யோகா குரு பி.கே.எஸ்.அய்யங்கார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.பி.கே.எஸ்.அய்யங் கார், 1918-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி பிறந்தவர். ‘அய்யங்கார் யோகா’ என்ற அமைப்பை நிறுவியவர். உலகின் முன்னோடி யோகா ஆசிரியர் களில் ஒருவராக கருதப்படுபவர்.கமல்ஹாசன்நாட்டின் 3-வது உயரிய ‘சிவில்’ விருதான பத்ம பூஷண் விருது, பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்து, டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், பேட்மிண்டன் வீரர் கோபிசந்த், பிரபல ‘கடம்’ வித்துவான் விநாயக்ராம், கர்நாடக சங்கீத பாடகி பர்வீன் சுல்தானா, நீதிபதி தல்வீர் பண்டாரி, எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் ஆகியோர் உள்பட 24 பேர், ‘பத்ம பூஷண்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.பத்மபூஷண் விருதுபெறும் கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம் மிகவும் மூத்த கலைஞராவார். இவர் தனது 12-வது வயதில் இருந்தே பெரிய பாடகர்களுக்கு கடம் வாசித்து வருகிறார். 66-ம் ஆண்டில் ஐ.நா.சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும்போது இவர் தான் கடம் வாசித்தார். கடம் வித்வான்களில் பத்ம விருது பெறும் முதல் கலைஞரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.பத்மஸ்ரீஇந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், ‘ஸ்குவாஷ்’ வீராங்கனை தீபிகா பலிக்கல், இந்தி நடிகர் பரேஷ் ராவல், இந்தி நடிகை வித்யா பாலன், டைரக்டர் சந்தோஷ் சிவன் உள்ளிட்டோர் ‘பத்மஸ்ரீ’ விருது பெறுகின்றனர். மத்திய மந்திரி சரத்பவாரின் சகோதரரும், சாகல் செய்தித்தாள் குழும அதிபருமானபிரதாப் கோவிந்தராவ் பவார், தமிழக விஞ்ஞானி டாக்டர் அஜய் குமார் பரிடா, தமிழக தொழில் அதிபர் மல்லிகா சீனிவாசன், மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, கபடி வீராங்கனை சுனில் தபாஸ், மலை ஏற்ற வீரர்கள் லவ் ராஜ்சிங் தர்மசக்து, மம்தா சோதா, சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர் போனிபேஸ் பிரபு, பிரபல நரம்பியல் நிபுணர் சுனில் பிரதான், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் தேனும்கல் பவுலோஸ் ஜேக்கப், தமிழக யுனானி மருத்துவர் ஹகீம் சையது கலீபதுல்லா, மருத்துவர் ராஜேஷ் குரோவர், நாடக கலைஞர் பன்சி கவுல் உள்பட 101 பேருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்படுகிறது.எப்போது வழங்கப்படும்?இந்த விருதுகளை, வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...